செவ்வாய், 21 அக்டோபர், 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!


ஐம்பது நபர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர். கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்த பயிற்சியாளர் தனது பேச்சை நிறுத்திவிட்டு அங்கிருந்தவர்களின் கையில் ஒரு பலூனைக் கொடுத்தார்.

‘உங்கள் பெயரை பலூனில் எழுதி அதை அடுத்த அறையில் விட்டு விட்டு வாருங்கள்’ என்றார்’.

எல்லோரும் அப்படியே செய்தார்கள்.

‘இப்போது அந்த அறைக்குச் சென்று உங்கள் பெயர் உள்ள பலூனை ஐந்து நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து எடுத்து வாருங்கள்’, என்றார் பயற்சியாளர்.

எல்லோரும் அவசர அவசரமாக அந்த அறைக்குள் போய் தங்கள் பெயர் எழுதப்பட்டிருந்த பலூனைத் தேடினார்கள். ஒருவரின் மேல் ஒருவர் மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு குழப்பமோ குழப்பம்!

ஐந்து நிமிடத்தில் யார்க்குமே அவர் பெயர் எழுதப்பட்டிருந்த பலூனை கண்டுபிடிக்க முடியவில்லை.

பயிற்சியாளர் இப்போது சொன்னார்: ‘ஏதாவது ஒரு பலூனை எடுத்து வாருங்கள். அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் கொண்டவரைக் கண்டுபிடித்து அவரிடம் அந்தப் பலூனைக் கொடுங்கள்’.

சில நிமிடங்களில் ஒவ்வொரு கையில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருந்த பலூன் இருந்தது. எல்லோர் முகத்திலும் சிரிப்பு; நிம்மதி.

பயிற்சியாளர் சொன்னார்: ‘நாம் எல்லோரும் இப்படித்தான். சந்தோஷம் எங்கே என்று நம்மைச் சுற்றி சந்தோஷத்தை தேடிக் கொண்டே இருக்கிறோம். நம் சந்தோஷம் மற்றவர்களின் சந்தோஷத்தில் இருக்கிறது. மற்றவர்களுக்கு அவர்கள் சந்தோஷத்தைக் கொடுங்கள். உங்கள் சந்தோஷம் உங்களைத் தேடி வரும்!’

எல்லோருக்கும் இந்த இனிய தீபாவளி நன்னாள் சந்தோஷத்தைக் கொண்டு வரட்டும்!

இனிய 2014 ஆம் வருட தீபாவளி வாழ்த்துக்கள்!